பி.எஸ்.ஜி மருத்துவமனையில் விழிப்புணர்வு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சிறப்பு விருந்தினராக என்.சி.சி குரூப் ஹெட் குவார்ட்டர்ஸ் நிர்வாக அதிகாரி சுவாமி, கௌரவ விருந்தினராக மோல்ட்-மாஸ்டர்ஸ் டிஎம்இ இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியா, மத்திய கிழக்கு & ஆப்பிரிக்கா பொது மேலாளர் ஸ்வப்னில் சங்கே கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுப்பாராவ், என்சிசி கேடட்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நுரையீரல் மருந்துவர் தாரணி புகைப்பிடித்தால் ஏற்படும் நோய்கள் குறித்துப் பேசினார்.